TNPSC Thervupettagam

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் செயல்திறன்

August 27 , 2025 29 days 53 0
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், அடிக்கடி இடையூறுகளும் ஒத்தி வைப்புகளும் பதிவானது.
  • மக்களவையானது அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 29 சதவீதம் மட்டுமே செயல்பட்ட  அதே நேரத்தில் மாநிலங்களவை வெறும் 34 சதவீதம் மட்டுமே செயல்பட்டது.
  • இது 18வது மக்களவையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த செயல்திறன் ஆகும் என்பதோடு இதற்கு பெரும்பாலும் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தடை பட்ட நடவடிக்கைகள் ஆகியவையே காரணமாகும்.
  • மக்களவையில் கேள்வி நேரத்தின் 23 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது என்ற நிலைமையில் மாநிலங்களவையில் வெறும் 6 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
  • கூட்டத் தொடரின் போது மாநிலங்களவையில் 12 நாட்களும், மக்களவையில் ஏழு நாட்களும் வாய்மொழி பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
  • மக்களவையில் நட்சத்திரக் குறியிட்ட கேள்விகளில் 8 சதவீதத்திற்கும், மாநிலங்களவையில் 5 சதவீதத்திற்கும் மட்டுமே அமைச்சர்கள் பதிலளித்தனர்.
  • 2025 ஆம் ஆண்டு வருமான வரி மசோதா, தேர்வுக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டு, அதே நாளில் அதற்குப் பதிலாக புதிய மசோதா நிறைவேற்றப் பட்டது.
  • சிந்தூர் நடவடிக்கை அவற்றின் மொத்த நேரத்தின் பெரும்பகுதியாக மக்களவையில் 19 மணி நேரமும், மாநிலங்களவையில் 16 மணி நேரமும் விவாதிக்கப்பட்டது.
  • 18வது மக்களவை உருவாக்கப்பட்டதிலிருந்து மக்களவை அதன் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதோடு மேலும் இதற்கு முந்தைய 17வது மக்களவையிலும் ஐந்து ஆண்டுகளாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்