பாலஸ்தீனத்திற்கான இரு நாடு தீர்வை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இந்தத் தீர்மானமானது 142 நாடுகள் ஆதரவுடனும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்து, 12 நாடுகள் வாக்களிக்காமலும் நிறைவேற்றப்பட்டது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு நியாயமான தீர்வை அடைய நியூயார்க் பிரகடனம் அழைப்பு விடுக்கிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் வன்முறை, குடியேற்ற விரிவாக்கம் மற்றும் இணைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்ரேல் நாட்டிற்கு வலியுறுத்தப் படுகிறது.
பாலஸ்தீன சுயநிர்ணய உரிமை மற்றும் காசாவை மேற்குக் கரை பகுதியுடன் இணைப்பதற்கான ஆதரவை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.