பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம்
September 2 , 2019 2477 days 1023 0
பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் (UN Convention to Combat Desertification - UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின்14வது மாநாடு கிரேட்டர் நொய்டாவில் தொடங்கியது.
இந்த மாநாடு இந்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும். COP14 இல் உலகம் முழுவதிலுமிருந்து 3000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள விருக்கின்றார்கள்.
UNCCD என்பது பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்காகவும் வறட்சி மற்றும் பாலைவனமாக்கலின் விளைவுகளைத் தணிப்பதற்காகவும் அமைக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே சர்வதேச அளவிலான சட்டப்பூர்வமாக அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமைப்பாகும்.
இந்தியா 1994 இல் UNCCDல் கையெழுத்திட்டது. பின்னர் 1996 இல் அதை உறுதி செய்தது.