TNPSC Thervupettagam

பாவினி சுக்லா Vs இந்திய ஒன்றியம் வழக்கு

March 13 , 2026 5 days 95 0
  • தனிநபர் சட்டங்களில் உள்ள பாலின பாகுபாடுகளைக் களைய பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்துமாறு 'பாவினி சுக்லா எதிர் இந்திய ஒன்றியம்' வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
  • பொது சிவில் சட்டம் (UCC) என்பது மதம், சாதி, இனம் அல்லது பாலினம் பாராமல் அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான சட்டத்தைக் கொண்டு மதம் சார்ந்த தனிநபர் சட்டங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 44-வது சரத்து, இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தை உறுதி செய்ய அரசை அறிவுறுத்துகிறது.
  • திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல் மற்றும் வாரிசுரிமை போன்ற விவகாரங்கள் 'பொதுப் பட்டியலில்' (ஏழாவது அட்டவணை) வருகின்றன என்பதால் இது மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்ற அனுமதிக்கிறது.
  • பொது சிவில் சட்டம் பாலின நீதி, மதச்சார்பின்மை, எளிமைப்படுத்தப்பட்ட சட்ட நடைமுறைகள் மற்றும் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும், அதே நேரத்தில் கோவா 1867 ஆம் ஆண்டின் 'போர்த்துகீசிய சிவில் சட்டத்தை' பொதுவான சிவில் சட்டமாகப் பின்பற்றுகிறது.
  • இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் (2018), தற்போது நாடு தழுவிய பொது சிவில் சட்டம் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக தற்போதுள்ள குடும்பச் சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்