TNPSC Thervupettagam

பிடாரி ஏகவீரி கல்வெட்டு

July 8 , 2026 16 hrs 0 min 21 0
  • திருவலஞ்சுழியில் உள்ள சடைமுடிநாதர் கோவிலில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, பிடாரி ஏகவீரி அம்மனுக்கு சோழர் கால அரச மானியம் வழங்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளது.
  • முதலாம் ராஜராஜனின் அத்தையான குந்தணன் அமுதவல்லியார், அம்மனுக்கு அவபால அஞ்சனை சடங்கை ஆதரிக்க 40 பொற்காசுகளை நன்கொடையாக வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது.
  • இந்த அறக்கட்டளை கோவிலின் விளக்குகள் மற்றும் காணிக்கைகளுக்காக ஆறு பிராமணர்கள் மூலம் ஆண்டு வட்டியாக 30 கலம் நெல்லை வழங்கியது.
  • இரண்டாம் ராஜேந்திரனின் ஆட்சியின் போது, தடையற்ற வழிபாட்டை உறுதி செய்யும் வகையில், ஆண்டுக்கு 15 கலம் நெல் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த அறக்கட்டளை தொடரப் பட்டது.
  • இக்கல்வெட்டானது கோவில்களை ஆதரிப்பதற்கும், மத மரபுகளைப் பாதுகாப்பதற்கும் அரச அறக்கட்டளைகளைப் பயன்படுத்தும் சோழர்களின் நடைமுறையை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்