TNPSC Thervupettagam

பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுக்கான காலநிலை சார்ந்த நவீன (திறன்மிகு) வேளாண் முறைகள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு

December 14 , 2019 1986 days 646 0
  • பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுக்கான காலநிலை சார்ந்த  நவீன (திறன்மிகு) வேளாண் முறைகள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கானது புது தில்லியில் தொடங்கி இருக்கின்றது.
  • இது மத்திய வேளாண் & விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Agricultural Research - ICAR) ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தக் கருத்தரங்கானது காலநிலை மாற்றத்திற்கு உகந்த வெப்பமண்டல குறு நில விவசாய முறையை மேம்படுத்துவதையும் அதிக உற்பத்தித் திறனை அளிப்பதையும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காலநிலை சார்ந்த திறன்மிகு விவசாயத்திற்கான உலகளாவிய கூட்டணியின் கருத்தரங்கானது உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் (FAO - Food and Agriculture Organization) நடத்தப் பட்டது.

BIMSTEC பற்றி

  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation - BIMSTEC) என்பது பூடான், வங்க தேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
  • இந்தத் துணைப் பிராந்திய அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் பாங்காக் பிரகடனத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்