December 4 , 2017
                                                                          2892 days 
                                      1104
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- பொது ஒலிபரப்புத்துறை அமைப்பான பிரசார் பாரதியின் தலைவராக முன்னாள் இதழியலாளரான A. சூர்ய பிரகாஷ் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 	- பிரசார் பாரதி அமைப்பானது தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலையும், அனைத்திந்திய (All India Radio) வானொலியையும் நடத்துகின்றது.
 
 	- இதற்கு முன் முதல் முறையாக சூர்ய பிரகாஷ் 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றிருந்தார்.
 
 	- இந்த அமைப்பிற்கு மீண்டும் தலைவராக பிப்ரவரி 2020 வரை இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 	- துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை தலைவராக கொண்ட மூன்று பேர் குழு இவரை நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
பிரசார் பாரதி
 	- பிரசார் பாரதி அமைப்பானது பிரசார் பாரதி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சியுடைய சட்ட அமைப்பாகும்.
 
 	- இது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
 
 	- இது 1997 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.
 
 	- இது நாட்டின் ஒலிபரப்பு சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனமாகும்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                1104