பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா
March 28 , 2020
1907 days
1386
மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார் .
இது கோவிட் – 19 தொற்று நோய் மற்றும் அவற்றின் தாக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்காக நாட்டில் உள்ள மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு பொருளாதார உதவித் திட்டமாகும் .
இந்தத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 1 . 7 இலட்சம் கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது .
இந்தத் திட்டத்தின் கீழ் , நாட்டில் உள்ள ஏறத்தாழ 80 கோடி மக்கள் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமையை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாகப் பெற இருக்கின்றனர் .
இதனுடன் சேர்த்து , ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு கிலோ பருப்பினையும் இலவசமாகப் பெற இருக்கின்றனர் .
இந்தத் திட்டமானது கொரானா வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் , துப்புரவுப் பணியாளர்கள் , செவிலியர்கள் , மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்களுக்காகக் காப்பீட்டு வசதியை வழங்க இருக்கின்றது .
இந்தத் திட்டமானது முதியோர்கள் , மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்குத் தலா ரூ .1000 ரூபாயை நேரடிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் வழங்க இருக்கின்றது .
மேலும் இந்தத் திட்டமானது பிரதான் மந்திரி உஜ்வாலா என்ற திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு உருளைகளையும் வழங்க இருக்கின்றது .
இந்தப் பொருளாதாரத் திட்டமானது மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தினக் கூலித் தொழிலாளர்களின் ஊதியத்தை ரூ .182 லிருந்து ரூ .202 ஆக உயர்த்தியுள்ளது .
மத்திய அரசு தற்பொழுது துப்புரவுப் பணியாளர்களை MNREGA ( Mahatma Gandhi National Rural Employment Guarantee Act ) என்ற திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது .
மேலும் இவர்கள் மூன்று மாத காலத்திற்கு ரூ .2000 ஐ சிறப்பு ஊதியமாகப் பெற இருக்கின்றனர் .
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் , வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்கள் அடுத்த 3 மாதங்களுக்கு ரூ .500 ஐப் பெற இருக்கின்றனர் .
Post Views:
1386