TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா

March 28 , 2020 1907 days 1386 0
  • மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இது கோவிட் – 19 தொற்று நோய் மற்றும் அவற்றின் தாக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்காக நாட்டில் உள்ள மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு பொருளாதார உதவித் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 1.7 இலட்சம் கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஏறத்தாழ 80 கோடி மக்கள் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமையை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாகப் பெற இருக்கின்றனர்.
  • இதனுடன் சேர்த்து, ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு கிலோ பருப்பினையும்  இலவசமாகப் பெற இருக்கின்றனர்.
  • இந்தத் திட்டமானது கொரானா வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்களுக்காகக் காப்பீட்டு வசதியை வழங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்குத் தலா ரூ.1000 ரூபாயை நேரடிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் வழங்க இருக்கின்றது.
  • மேலும் இந்தத் திட்டமானது பிரதான் மந்திரி உஜ்வாலா என்ற திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு உருளைகளையும் வழங்க இருக்கின்றது.
  • இந்தப் பொருளாதாரத் திட்டமானது மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தினக் கூலித் தொழிலாளர்களின் ஊதியத்தை ரூ.182லிருந்து ரூ.202 ஆக உயர்த்தியுள்ளது.
  • மத்திய அரசு தற்பொழுது துப்புரவுப் பணியாளர்களை MNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) என்ற திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது.
  • மேலும் இவர்கள் மூன்று மாத காலத்திற்கு ரூ.2000 சிறப்பு ஊதியமாகப் பெற இருக்கின்றனர்.
  • பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்கள் அடுத்த 3 மாதங்களுக்கு ரூ.500ஐப் பெற இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்