TNPSC Thervupettagam

பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் திட்டம்

December 11 , 2021 1353 days 679 0
  • பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் எனப்படும் அனைவருக்குமான வீட்டு வசதித் திட்டத்தினை 2024 ஆம் ஆண்டு மார்ச் வரையில் நீட்டிப்பதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நிலவரப்படி, கட்டி முடிக்கப்படாத 155.75 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.
  • இத்திட்டத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் வரையில் நீட்டிப்பதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2.95 கோடி வீடுகள் என்ற இலக்கின் வரம்பில் மீதமுள்ளக் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப் படும்.
  • இது கிராமப்புறப் பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற ஒரு இலக்கை அடைய உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்