இந்திய விமானப் படை உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பிரலய் எனும் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியை நடத்த உள்ளது.
இங்கு ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த வேண்டி இந்திய அரசு எல்லையில் இது போன்ற ராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, மற்றும் இந்தியா - சீனா எல்லையில் உள்ள உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றில் ஊடுருவல்கள் பொதுவாக நிகழும்.
இந்தியாவின் முன்னணி போர் விமானங்களான ரஃபேல் மற்றும் சுகாய் 30 ஆகியவை இதில் பங்கேற்கும்.
இந்தியா சமீபத்தில் S - 400 ஏவுகணைகளை இப்பகுதியில் நிலை நிறுத்தியது.
இந்திய விமானப்படை இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக வேண்டி தனது ஆளில்லா விமானங்களையும் சிலிகுரி வழித்தட பகுதிக்கு மாற்றியுள்ளது.