எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர்களுக்கான ‘பிரஹாரி’ என்ற ஒரு செயலியைச் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் வீரர்கள் தங்குமிட வசதிகள், ஆயுஷ்மான்-CAPF மற்றும் விடுப்பு ஆகியவை பற்றியத் தகவல்களைப் பெறுவதற்கு வேண்டி பிரஹார் செயலியினைப் பயன்படுத்த இயலும்.
இந்த செயலியானது வீரர்களின் சுய விவரக் குறிப்பு பற்றிய தகவல்களையும், “மையப் படுத்தப் பட்ட பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CP-GRAMS) தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வது பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
இது எல்லைப் பாதுகாப்புப் படைக்கான பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
இது செயலியின் மூலம் பயனரை உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்துடன் இணைக்கும்.