உலகளாவிய வேளாண்மைத் துறையில் உள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் வேளாண்மைக் கூட்டம் இந்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டம் உணவுப் பாதுகாப்பு, உழவர் நலன், ஊட்டச்சத்து மற்றும் பருவநிலைக்கு ஏற்ற திறன்சார் வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
விவசாய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், டிஜிட்டல் வேளாண்மை, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை (DA&FW) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 11 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.