பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளை ஆதார் மூலம் உறுதிப்படுத்தலுக்கு அனுமதி
July 2 , 2023 1157 days 567 0
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளுக்கு ஆதாரைப் பயன்படுத்துவதன் மூலம் அதனை உறுதிப்படுத்தச் செய்வதற்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகமானது அனுமதி அளித்து உள்ளது.
இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது நல்ல வாழ்க்கை வசதி மற்றும் சிறந்தச் சேவைகளுக்கான ஒரு அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும் இப்போது வரையில் அத்தகையப் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்பதோடு மேலும் இது ‘தன்னார்வ அடிப்படையில்’ முன்மொழியப் பட்டு உள்ளது.