TNPSC Thervupettagam

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்

March 5 , 2019 2316 days 1092 0
  • மத்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தைத் (National Commission for Backward Classes - NCBC) துவக்கி வைத்தது.
  • அந்த அமைப்பிற்கு அரசியலமைப்பு தகுதி நிலையை வழங்கிடுவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்திய பிறகு இது செயலற்றதாக மாறிய இரண்டு ஆண்டுகள் கழித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • இந்தப் புதிய ஆணையம் பகவான் லால் சாஹ்னியைத் தலைவராகக் கொண்டது. இதன் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு
    • கௌசலேந்திர சிங் படேல்
    • சுதா யாதவ்
    • அசாரி தலோஜ்
  • பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆணையங்களுக்கு இணையாக இந்தப் புதிய ஆணையம் அரசியலமைப்பில் விதி 338B-யில் குறிப்பிடப்பட்டிக்கின்றது.
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தேசியப் பட்டியலில் சாதிகளை சேர்த்தல் மற்றும் விலக்குதல் என்று முன்பிருந்த வரையறுக்கப்பட்ட நிலைமைக்கு எதிராக தற்போது இந்த ஆணையம் அவர்களின் குறைகளை கேட்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்