இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் கீழ் அணுமின் நிலையத்தை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் பீகாரும் ஒன்றாகும்.
மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த ஆலை சிறிய அணு உலை (SMR) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்.
இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதும் தூய்மையான மற்றும் நம்பகமான அணு சக்தியை விரிவுபடுத்துவதையும் பிராந்திய எரிசக்திக் காப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
SMR உலைகள் வழக்கமான உலைகளை விட நெகிழ்வான, செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான புதிய அணு உலைகள் ஆகும்.