TNPSC Thervupettagam

பீஹைவ் திட்டம் - இந்திய ராணுவம்

October 17 , 2019 2095 days 822 0
  • இராணுவத்தின் மின்னணு மற்றும் எந்திரவியல் பொறியாளர்கள் குழுவானது (Electronics and Mechanical Engineers - EME) “பீஹைவ் திட்டம்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • குறிக்கோள்: இது படைப் பிரிவின் அதிக இயந்திரமயமாக்கத்தை அடைவதையும் அதன் அனைத்துப் பட்டறைகளையும் நிகழ்நேரத்  தரவுப் பகுப்பாய்வுத்  திறன்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த சிறந்த அமைப்புடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • WASPன் (Workshop Honeybees - ஹனிபீஸ் பட்டறை) கீழ், இராணுவப் பட்டறைகள் ஏற்கனவே தானியங்கி மயமாக்கப் பட்டுள்ளன.
  • பீஹைவ் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த WASPகள் அல்லது பட்டறைகள் மையப்படுத்தப்பட்ட பீஹைவ்களாக செயல்பட இருக்கின்றன.
  • இராணுவத்தின் உபகரணங்களின் நிகழ்நேரத் தரவானது (பழுதுபார்ப்பு, புதுப்பித்தல் மற்றும் மாற்றியமைத்தல்) ஒரே இடத்தில் கிடைக்கும்.
  • பீஹைவ் திட்டமானது செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 15க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
EME பற்றி
  • EME என்பது இந்திய இராணுவத்தின் ஆயுத மற்றும் சேவைப் பிரிவாகும்.
  • இது ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, ஆய்வு மற்றும் மறுசீரமைப்புக்குப் பொறுப்பாக இருக்கின்றது.
  • இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1943 இல் உருவாக்கப்பட்டது. இது 2001 ஆம் ஆண்டில் அதன் தற்போதைய பெயருக்கு மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்