ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள புதாபாலங்கா நதியில் சூடோலாகுவியா கைரி (Pseudolaguvia khairii) என்ற புதிய நன்னீர் கெளுத்தி மீன் இனம் கண்டறியப் பட்டு உள்ளது.
ஒடிசாவில் வனவிலங்குப் பாதுகாப்போடு தொடர்புடைய, ஆதரவற்று வளர்ந்த 'கைரி' (Khairi) எனும் ராயல் பெங்கால் பெண் புலியின் நினைவாகவே இப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
சூடோலாகுவியா கைரி, சூடோலாகுவியா பேரினம் மற்றும் சிலுரிஃபார்ம்ஸ் (கெளுத்தி மீன் குழு) வரிசையைச் சேர்ந்ததாகும்.
இந்த இனம் வேகமாக பாயும் நன்னீர் நதிகளுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட ஒரு சிறிய மலைநீரோடை கெளுத்தி மீன் ஆகும், மேலும் அதன் முதுகுப்புற துடுப்பின் அடிப்பகுதியில் உள்ள தனித்துவமான சதைப்பற்றுள்ள புடைப்பு மூலம் இது அடையாளம் காணப்படுகிறது.
கைரி 1970-களில் ஒடிசாவின் சிமிலிபால் காடுகளிலிருந்து மீட்கப்பட்டு, வனவிலங்கு பாதுகாவலரான சரோஜ் ராஜ் சௌத்ரி மற்றும் நிஹார் நளினி ஸ்வைன் ஆகியோரால் வளர்க்கப்பட்டது.