TNPSC Thervupettagam

புதிய சிபிஐ இயக்குநர்

February 5 , 2019 2310 days 2205 0
  • இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பின் (Central Bureau of Investigation - CBI) தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
  • இவரது பதவிக்காலம் பிப்ரவரி 02-ம் தேதியிலிருந்து தொடங்குகின்றது. இவர் தன் பதவியை பிப்ரவரி 04-ம் தேதியன்று ஏற்றுக் கொண்டார்.
  • இவர் தற்சமயம் போபாலில் உள்ள மத்தியப் பிரதேச காவல்துறை வீட்டுவசதி கழகத்தின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
  • ரிஷி குமாரின் நியமனம் பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஒப்புதலளிக்கப்பட்டது.
  • சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவானது பிரதமர், இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்டதாகும்.
  • சிபிஐ இயக்குநர் தேடல் குழு மத்திய ஊழல் தடுப்பு ஆணையரைத் தலைவராகவும் இதர ஊழல் தடுப்பு ஆணையர்கள், உள்துறைச் செயலாளர், அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்