பார்வையாளர்களின் அளவீட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கையை அறிவித்துள்ளது.
அதிக முகமைகளை அனுமதிக்கவும், இத்துறையில் போட்டியை அதிகரிக்கவும் நிகர மதிப்புத் தேவை ₹20 கோடியிலிருந்து ₹5 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நியாயமான மற்றும் பாரபட்சமற்ற மதிப்பீடுகளை உறுதிப்படுத்த, வாரிய உறுப்பினர்களில் குறைந்தது 50% பேர் சுயேச்சையானவர்களாகவும், ஒளிபரப்பாளர்கள் அல்லது விளம்பரதாரர்களுடன் தொடர்பு இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
துல்லியமான தொலைக்காட்சி பார்வையாளர் தரவைச் சேகரிக்க, மீட்டர்கள் பொருத்தப் பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 80,000 ஆகவும், பின்னர் 1.2 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
உட்புற மற்றும் வெளிப்புற என இரட்டைத் தணிக்கை முறை அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
தரவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முகமைகள் DPDP (டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு) சட்டம், 2023-ஐப் பின்பற்ற வேண்டும்.
2014 வழி காட்டுதல்களுக்கு மாற்றாக அமையும் இக்கொள்கை நம்பகமான தொலைக் காட்சி பார்வையாளர் அளவீட்டு முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.