2019 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW - Research and Analysis Wing) புதிய தலைவராக மூத்த இந்தியக் காவற் பணி அதிகாரியான சமந்த் கோயல் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
நுண்ணறிவு அமைப்பின் (IB - Intelligence Bureau) இயக்குனராக மூத்த இந்தியக் காவற்பணி அதிகாரியான அரவிந்த் குமார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
இவர்களது பெயர்கள் பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவினால் இறுதி செய்யப்பட்டன. இந்த நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் உள்துறை அமைச்சரும் அடங்குவார்.
மத்திய அரசு நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் என்பவரின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.