TNPSC Thervupettagam

புதிய வளர்ச்சி வங்கி – புதிய உறுப்பினர்கள்

September 5 , 2021 1372 days 674 0
  • BRICS குழும நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியானது ஐக்கிய அரபு அமீரகம், உருகுவே மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை தனது புதிய உறுப்பினர்களாக இணைத்துள்ளது.
  • புதிய வளர்ச்சி வங்கியானது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது BRICS அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) தொடங்கப்பட்டது.
  • இந்த வங்கியானது இதற்கு முன்பாக “BRICS வளர்ச்சி வங்கிஎன அழைக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் சாங்காய் நகரில் அமைந்துள்ளது.
  • இந்த வங்கியின் முதலாவது பிராந்திய அலுவலகமானது தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.
  • இதனுடைய 2வது பிராந்திய அலுவலகமானது 2019 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டிலும் அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் நிறுவப் பட்டது.
  • உறுப்பினர் நாடுகள் மற்றும் இதர வளர்ந்துவரும் நாடுகளில் மேம்பாட்டிற்கான வளங்களை இந்த வங்கி திரட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்