புதிய விட்டில் பூச்சி உயிரினங்கள் - அருணாசலப் பிரதேசம்
January 13 , 2018 3024 days 1330 0
அருணாசலப் பிரதேசத்தில் சிரோ என்னுமிடத்தில் உள்ள தல்லே வனவிலங்கு சரணாலயத்தில் எல்சிஸ்மா சிரோயென்சிஸ் (Elcysma Ziroensis) என்ற புதிய விட்டில் பூச்சி வகை உயிரினம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஜைகாயேனிட் (Zygaenid) விட்டிற்பூச்சி கண்டுபிடிப்பு சர்வதேச உயிரினப் பாதுகாப்பு மற்றும் தொகுப்புமுறை பத்திரிக்கையான அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினப் பட்டியல் பத்திரிக்கையில் (Journal of Threatened Taxa) வெளியிடப்பட்டது.
சிரோ பள்ளத்தாக்கில் வாழும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் பொதுவான பெயராக அபாடனி குளோரி (Apatani Glory) என்று பெயரிடப்பட்டுள்ளது.