திருத்தப்பட்ட புதிய விதிகளின் கீழ், H-1B நுழைவு இசைவுச் சீட்டுகள் இதன்பின் சீரற்ற நிர்ணயம் மூலம் வழங்கப் படாது.
அதற்குப் பதிலாக, ஊதிய நிலைகள் மற்றும் அந்தப் பணியின் திறன் தேவைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இனி மதிப்பிடப்படும்.
புதிய விதிகள் என்பவை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியன்று அமலுக்கு வரும் என்பதோடுஅவை 2027 ஆம் நிதியாண்டின் H-1B வரம்பு நிர்ணயப் பதிவு பருவத்திற்குப் பொருந்தும்.
தற்போது, இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 65,000 H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளை அனுமதிக்கிறது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளில் தற்போது இந்தியர்களின் பங்கு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.