TNPSC Thervupettagam

புதிய UPI விதிகள் 2025

August 5 , 2025 10 days 69 0
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுக (UPI) விதிகளை அமல்படுத்தியுள்ளது.
  • சேவையகத்தின் செயல்பாட்டுச் சுமையைக் குறைக்கவும், அதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், பணக் கையிருப்பு குறித்த கோருதல்களின் எண்ணிக்கையினை தற்போது ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
  • தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை தினமும் 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
  • சந்தாக்கள் மற்றும் கட்டணங்கள் போன்ற தானியங்கிக் கட்டணங்கள் காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை அல்லது இரவு 9:30 மணிக்குப் பிறகு மட்டுமே செயல்படுத்தப்படும்.
  • பயனர்கள், நிலுவையில் உள்ள பரிவர்த்தனை நிலையை, பரிவர்த்தனை முயற்சிகளுக்கு இடையில் 90 வினாடி இடைவெளியுடன் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
  • மோசடி மற்றும் தற்செயலானப் பரிமாற்றங்களைத் தடுக்கப் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன் பெறுநரின் பெயர் மற்றும் பரிவர்த்தனை அடையாள முகவரி காட்டப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்