TNPSC Thervupettagam

புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பிற்கான கூட்டு உருவாக்க நிதி

October 12 , 2025 26 days 68 0
  • கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகளாவிய புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் 100 கோடி ரூபாய் அளவிலான கூட்டு உருவாக்க நிதியை அறிவித்தார்.
  • இந்த நிதியை தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் திட்டம் (StartupTN) நிர்வகிக்கும்.
  • இது தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்ககளை ஆதரிக்கும் துணிகர மூலதன நிதிகளில் முதலீடு செய்யும்.
  • நடப்பு நிதியாண்டில் இந்தக் கூட்டு உருவாக்க நிதிக்காக 20 கோடி ரூபாய் பிரத்தியேக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2020 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 36 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் பதிவானது.
  • 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 2,032 ஆக இருந்த DPIIT துறையினால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது 12,000 ஆக ஆறு மடங்கு அதிகரித்துள்ளது, அவற்றில் பாதி பெண்கள் தலைமையில் இயங்குகின்றன.
  • 2018 ஆம் ஆண்டில், புத்தொழில் நிறுவனங்களின் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு மிகக் குறைந்த தரவரிசையில் இருந்தது, ஆனால் 2022 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களுள் முதலிடத்திற்கு உயர்ந்தது.
  • Inc42 நிறுவனத்தின் படி, தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களால் திரட்டப்பட்ட சராசரி முதலீடு ஆனது 2016 ஆம் ஆண்டில் 1 மில்லியன் டாலரில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 6 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்