புயல் உருவாவதை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்
June 13 , 2021 1516 days 686 0
கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது புயல் உருவாவதை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இது வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பமண்டலப் புயல்கள் உருவாவதை (அ) வலுப் பெறுவதை முன்கூட்டியேக் கண்டறிய உதவும்.
இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனமானது சுழல் கண்டறியும் வகையிலான ஒரு தொழில்நுட்பத்தினை (Eddy detection technique) பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.