புலம்பெயர்ந்தோர் மற்றும் தாய்நாடு திரும்பியோருக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டம்
March 6 , 2022 1255 days 464 0
இத்திட்டத்தின் கீழ், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்திற்கு ஏற்கனவே உள்ள 7 துணைத் திட்டங்களைத் தொடர்வதற்கான முன்மொழிதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதன்மைத் திட்டத்தின் கீழான உதவிகள், உள்துறை அமைச்சகத்தின் மூலம் பயனாளிகளைச் சென்றடைவது தொடரும் என்ற உறுதிப்பாட்டினை இந்த ஒப்புதல் உறுதி செய்ய முயல்கிறது.
இடம்பெயர்தலால் பாதிக்கப்பட்டுள்ள தாய்நாடு திரும்பியோர் மற்றும் புலம் பெயர்ந்தோர், நியாயமான முறையில் வருவாய் ஈட்டவும் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டி இந்தத் திட்டம் உதவுகிறது.