TNPSC Thervupettagam

புல்புல் சூறாவளி (புயல்)

November 24 , 2019 2023 days 734 0
  • வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புல்புல் சூறாவளி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையமானது இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகியவற்றிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
  • இந்த சூறாவளியானது சாகர் தீவுகள் (மேற்கு வங்கம்) மற்றும் கெபுபாரா (வங்க தேசம்) ஆகியவற்றிற்கிடையே கரையைக் கடந்தது.
  • இந்த சூறாவளியானது பாகிஸ்தானால் பெயரிடப்பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக உருவான வட இந்தியப் பெருங்கடல் சூறாவளி பருவத்தின் ஏழாவது புயலாகும்.
  • கடந்த 34 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சூறாவளி இதுவாகும்.
  • ஏப்ரல் - மே மாதங்களில் ஏற்பட்ட மிகவும் கடுமையான ஃபானி சூறாவளிக்குப் பின்னர் இந்த ஆண்டில் வங்காள விரிகுடாவில் உருவாகிய இரண்டாவது புயலாக இது இருக்கும்.
  • பொதுவாக சூறாவளி அதிகம் ஏற்படாத அரேபியக் கடல் பகுதியானது இந்த ஆண்டில் மிகக் கடுமையான சூறாவளியான வாயு, மிகக் கடுமையான சூறாவளியான ஹிகா, சூப்பர் சூறாவளி கியார் மற்றும் மிகவும் கடுமையான சூறாவளியான மகா ஆகிய நான்கு பெரிய சூறாவளிகளைக் கொண்டுள்ளது.
  • இது கடந்த 117 ஆண்டுகளில் அரேபியக் கடலில் அதிக எண்ணிக்கையிலான கடுமையான சூறாவளிகள் ஏற்பட்ட சாதனையை சமன் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்