‘பூமி ராஷி’ இணைய வாயில் ஆனது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியைக் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த இணைய வாயில் ஆனது ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்நேரத்தில் செயலாக்கப்படும் அறிவிப்புகளுடன் செயல்முறையைப் பிழையில்லாமல் மற்றும் வெளிப்படையானதாக ஆக்கியுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது பூமி ராஷி என்ற இணைய வாயிலை ஏப்ரல் 1, 2018 அன்று அறிமுகப் படுத்தியுள்ளது.