தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறை (TNSDA) ஆனது, பண்டைய துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினத்தை மையமாகக் கொண்டு பூம்புகார் கடற்கரையில் 12 நாட்கள் அளவிலான கடலடி ஆய்வினை நடத்தியது.
இந்த ஆய்வானது திருமுல்லைவாசல் மற்றும் நெய்தவாசல் இடையேயான பகுதிகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் S. R. ராவ் முன்னர் அடையாளம் கண்ட இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
சேகரிக்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வில் உள்ளது என்ற நிலையில் கடல் நிலைமைகள் சாதகமாக மாறும் போது இந்த ஆய்வின் இரண்டாம் கட்டமானது மேற்கொள்ளப்பட திட்டமிடப் பட்டு உள்ளது.