சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அசாம் மற்றும் மணிப்பூர் அரசுகள் பெண்களுக்கு ரொக்க உதவியை அறிவித்துள்ள அதே நேரத்தில் பஞ்சாப் தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்கியுள்ளது.
அசாம் மாநிலம் அருணோடோய் திட்டத்தின் கீழ் சுமார் 40 லட்சம் பயனாளிக் குடும்பங்களுக்குத் தலா ₹9,000 2026 ஆம் ஆண்டு மார்ச் 10, அன்று நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தார் என்பதோடு இந்தத் தொகையில் பிஹு ஊக்கத் தொகை மற்றும் நான்கு மாதத் தவணைகள் (ஜனவரி-ஏப்ரல்) அடங்கும், இதன் மொத்த மதிப்பீடு ₹3,600 கோடி ஆகும்.
மணிப்பூர் இன மோதல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 3.5 லட்சம் பெண்களுக்கு உதவ மணிப்பூர் அரசு ₹350 கோடி ஒதுக்கியுள்ளது.
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது கடைசி பட்ஜெட்டில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.