இந்திய அரசானது, பெண் தொழிலாளர் வள பங்கேற்பு விகிதத்தை (FLFPR) 2024 ஆம் நிதியாண்டில் 41.7 சதவீதத்திலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 55% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்பமைவு மிக்க மற்றும் தொலைதூர வேலை, சம ஊதியம், பாதுகாப்பான பணி இடங்கள், மலிவு விலையிலான குழந்தைப் பராமரிப்பு மற்றும் ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணிகளுக்கு முறையான அங்கீகாரம் ஆகியவை இதில் அடங்கும்.
முறைப்படுத்தப்பட்டு வருகின்ற பராமரிப்பு சார் பொருளாதாரம், பெரும்பாலும் பெண்களுக்கு மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தத் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% முதலீடு செய்வது 11 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
சமீபத்தியத் தரவு ஆனது FLFPR 34.1% (2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வாராந்திர நிலை) மற்றும் 33.4% (2025 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில்) எனக் காட்டுகிறது.
ஷ்ரம் சக்தி நிதி 2025 வரைவு, இந்தியாவின் மக்கள்தொகை நன்மையைப் பயன்படுத்த பெண்களுக்கு ஒழுக்கமான வேலைவாய்ப்புக்கான அணுகலை விரிவுபடுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.