பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரசு முறையில் புறக்கணிக்கும் இந்தியா
February 6 , 2022
1227 days
434
- பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரசு முறையில் புறக்கணிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
- தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஊடகம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை ஒலி பரப்பாது.
- பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிப் போட்டிகளுக்குத் தங்களது தூதரை அனுப்பாது என்றும் இந்தியா கூறியது.
- எனினும் இந்தியா அந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு ஒரு விளையாட்டு வீரரை அனுப்பும் எனவும் அமைச்சகம் தெரிவித்தது.
குறிப்பு
- இராணுவ அலுவலர் கியு ஃபேபோ (Qi Fabao) என்பவரை தமது நாட்டின் சுடரை ஏந்தி அணியை முன் நடத்துபவராக சீனா தேர்ந்தெடுத்துள்ளது.
- இவர் 2020 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களில் ஈடுபட்டவர் ஆவார்.

Post Views:
434