பெரு நிறுவனங்களின் பேராசையினால் உண்டாகும் பணவீக்கம்
July 1 , 2023 1027 days 634 0
அமெரிக்காவில் தற்போது பெரு நிறுவனங்களின் பேராசையினால் உண்டாகும் பண வீக்க நிலை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் விலைகள் உயர்ந்து வருவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக அது உள்ளது.
இந்தப் பணவீக்க நிலையானது அடிப்படையில், அசல் பொருளாதார மாற்றங்களால் ஏற்படாமல் பெரு நிறுவனங்களின் பேராசையினால் உண்டாகும் பணவீக்கம் மற்றும் விலை உயர்வு ஆகும்.
ஆனால் இது இந்தியாவில் இன்னும் நிகழவில்லை.
ஆனால் நாட்டிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதற்காகவும், வாடிக்கையாளரை ஈர்க்கவும் தொடர்ந்து விலைகளை உயர்த்தி வருகின்றன.