2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே கையெழுத்தான பேரிடர் மேலாண்மை மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் வங்காளதேசத்தின் பேரிடர் மேலாண்மை & நிவாரண அமைச்சகத்திற்கும் இடையே மேற்கொள்ளப் பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது பேரிடர் மேலாண்மை, நெகிழ்திறன் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்தச் செய்வதற்கு என்று உள்ளதாகும்.