பொருட்கள் மீதான ஆய்விற்கான ஷேக் சவுத் சர்வதேச பரிசு
January 22 , 2019 2459 days 760 0
புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரான CNR ராவ் ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்குக்கான மையத்தின் முதலாவது ஷேக் சவுத் மூலப் பொருட்கள் மீதான ஆராய்ச்சிக்கான சர்வதேச விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
CNR ராவ் எனப் பிரபலமாக அறியப்படும் சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவிற்கு 2014-ல் ஆண்டில் குடிமக்களுக்கான மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தற்போது இவர் மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தின் கௌரவ தலைவராகப் பணியாற்றி வருகிறார்.