TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023: சிறப்பம்சங்கள்

February 2 , 2023 818 days 471 0
  • இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜனவரி 31 அன்று, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது மற்றும் அடுத்த ஆண்டுக்கான செயல்திட்டம் ஆகியவற்றினை இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்கிறது.
  • உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ உள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 2023 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் என்ற அளவில் (நிகழ் நேர மதிப்பில்) வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான சில்லறைப் பணவீக்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பிற்குள் மீண்டும் திரும்பியுள்ளது.
  • நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து வந்த போதும் அதிகளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கம் பதிவாகியுள்ள நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் நிகரப் பதிவும் வேகமான அளவில் பதிவாகியுள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில் 5.8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதமானது, 2020-21 ஆம் ஆண்டில் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட தனியார் துறையின் முதலீடு 9.3% ஆக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 8.4% ஆக இருந்த சேவைத் துறையின் வளர்ச்சி 2023 ஆம் நிதியாண்டில் அதே காலகட்டத்தில் 9.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்று, உலகிலேயே அதிக பணம் வரவு பெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • சேவை ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு நிதி வழங்கீட்டிற்குப் பங்களிக்கும் இரண்டாவது பெரிய மூல ஆதாரமாக இந்தப் பண வரவு திகழ்கிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறைக்கான கடன் வழங்கீட்டு வளர்ச்சி என்பது சராசரியாக 30.6 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
  • 2019 ஆம் நிதியாண்டில் 180 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மருந்து உற்பத்தித் தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு (FDI) ஆனது 2022 ஆம் நிதியாண்டில் நான்கு மடங்கு உயர்ந்து, 699 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 9.3 மாத இறக்குமதியை உள்ளடக்கிய அந்நியச் செலாவணி கையிருப்பு 563 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, உலகிலேயே அதிக அந்நியச் செலாவணி இருப்பு கொண்டுள்ள நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் மூலமான பரிவர்த்தனைகள் மதிப்பு (121 சதவீதம்) மற்றும் அளவு (115 சதவீதம்) ஆகியவற்றின் அடிப்படையில் 2019-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிகரித்துள்ளதன் மூலம் சர்வதேச அளவில் இந்த முறையினை ஏற்பதற்கான ஒரு வாய்ப்பினை இது வகுத்தது.
  • இந்தியாவில் உள்ள மொத்தத் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.8 கோடியாக உள்ள நிலையில் (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை), இதில் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் பதிவான சந்தாதாரர்களின் எண்ணிக்கை 44.3 சதவீத உள்ளது.
  • பிரசார் பாரதியானது (இந்தியாவின் தன்னாட்சிப் பொதுச் சேவை ஒளிபரப்பாளர்) - 479 நிலையங்களில் இருந்து 23 மொழிகளில், 179 பேச்சு வழக்குகளில் ஒளிபரப்பப் படுகிறது.
  • இது பரப்பளவில் 92 சதவீதப் பரவலையும், மொத்த மக்கள் தொகையில் 99.1 சதவீத நபர்களையும் சென்றடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்