பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டின் செல்லுபடித் தன்மை
September 16 , 2022 1004 days 396 0
இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது, 103வது திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மையினை உறுதி செய்ய மூன்று முக்கிய விடயங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
103வது திருத்தம் ஆனது 15(6) மற்றும் 16(6) ஆகிய பிரிவுகளை அரசியலமைப்பில் சேர்த்தது.
உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆரம்பகட்ட ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலிடப்பட்ட சாதியினர், மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் தவிர மற்றப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நபர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு இந்தத் திருத்தம் அதிகாரம் அளித்தது.
மேஜர் ஜெனரல் (ஓய்வு) S.R. சின்ஹோ என்பவர் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.