மத்திய நிதி அமைச்சகமானது மாறிவரும் வியாபாரச் சூழல்களுக்கேற்ப சட்டத்தை மாற்றியமைப்பதை உறுதி செய்வதற்காக 9 உறுப்பினர்கள் கொண்ட போட்டிச் சட்ட சீராய்வுக் குழுவை அமைத்திருக்கின்றது.
இக்குழுவானது பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலாளர் இஞ்செட்டி சீனிவாஸ் தலைமையில் அமைக்கப்படும்.
இது இந்திய திவால் மற்றும் கடன் சீரமைப்பு மன்றத்தின் தலைவர் S. ஷாஹுவையும் இந்தியப் போட்டி ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களாகக் கொண்டது ஆகும்.
2002 ஆம் ஆண்டு போட்டிச் சட்டம் ஏற்படுத்தப்பட்டதோடு 2009 ஆம் ஆண்டு இந்தியப் போட்டி ஆணையமும் ஏற்படுத்தப்பட்டது.