போதைப் பொருள் தேவையைக் குறைப்பதற்கான தேசிய செயல்திட்டம் (2018-2023)
January 16 , 2019 2393 days 746 0
மத்திய சமூக நலத்துறை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் போதைப் பொருள் விவகாரத்தையும் அதன் தவறான உபயோகத்தையும் சரிசெய்வதற்காக 5 வருட செயல்திட்டத்தை வரைவு செய்திருக்கின்றது.
இது அப்பிரச்சினைகளை சரி செய்வதற்காக பல்நோக்கு யுக்திகளை செயல்படுத்திட எண்ணுகின்றது.
இந்த யுக்திகள் கல்வி, விழிப்புணர்வு, போதைப் பழக்கத்திலிருந்து மீட்பது, போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மறுவாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.