போர்களால் ஆதரவிழந்தவர்களுக்கான உலக தினம் - ஜனவரி 06
January 8 , 2025 538 days 339 0
போரினால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பல இன்னல்களை இந்தத் தினம் அங்கீகரிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகள் மோதல்கள், பருவநிலை மாற்றம், புலம்பெயர்வு மற்றும் வறுமை ஆகியவற்றின் பேரழிவுத் தாக்கங்களை எதிர் கொண்டு, அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இழக்கின்றனர்.
இந்த நாள் என்பது முக்கிய நடவடிக்கைக்கான ஒரு உலகளாவிய அழைப்பாகச் செயல்படுவதோடு, பாதிக்கப் படக் கூடிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நலன், கல்வி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கான கூட்டு முயற்சிகளை வலியுறுத்துகிறது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், மோதல் மற்றும் வன்முறை காரணமாக தோராயமாக 47.2 மில்லியன் குழந்தைகள் இடம் பெயர்ந்துள்ளனர்.