மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது, 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் பதிவிற்கு (FCRA) மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுமதி அளித்துள்ளது.
இது "சமூக நல" திட்டங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற உதவுகிறது.
மாநில அரசின் நிவாரண அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் இந்த FCRA ஒப்புதலை வழங்கியது இதுவே முதல் முறையாகும்.
இயற்கைப் பேரிடர்கள், பெரிய விபத்துகள், வகுப்புவாதக் கலவரங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் அல்லது மருத்துவ மற்றும் கல்வி உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவியை கூடுதலாக வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில அரசுகளின் நிவாரண நிதிகள் பொதுவாக உள்நாட்டு நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளில் இயங்குகின்றன.
2018 ஆம் ஆண்டில், கேரள வெள்ள நிவாரணத்திற்கான வெளிநாடுகளின் உதவியை இந்திய அரசு மறுத்து விட்டது.
மகாராஷ்டிராவின் முதலமைச்சரின் நிவாரண நிதி (CMRF) ஆனது 1950 ஆம் ஆண்டு பம்பாய் பொது அறக்கட்டளைச் சட்டம் என்பதின் கீழ் ஒரு அறக்கட்டளையாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது நிதியின் மீது ஒட்டு மொத்த மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள முதலமைச்சரின் தலைமையில் மகாராஷ்டிர மாநில அரசினால் நன்கு நிர்வகிக்கப் படுகிறது.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரண நிதி அல்லது PM CARES நிதி ஆனது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்டது.
இது COVID-19 பெருந்தொற்றுநோயால் ஏற்பட்ட மிகவும் மோசமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இதற்கு FCRA விதிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.
ஒரு சங்கம், குழு அல்லது அரசு சாரா நிறுவனம் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விரும்பினால், 1976 ஆம் ஆண்டு முதன்முதலில் இயற்றப்பட்ட அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும்.
1976 ஆம் ஆண்டு இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப் பட்டு, அது 2020 ஆம் ஆண்டில் மீண்டும் திருத்தப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, சமய, பொருளாதார மற்றும் கலாச்சாரத் திட்டங்களுக்காக வெளிநாட்டுப் பங்களிப்புகளைப் பெறலாம்.