TNPSC Thervupettagam

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021 - ஜங்கனானா பவன்

September 25 , 2019 2125 days 826 0
  • மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை புது தில்லியில் கட்டுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
  • இதற்கு “ஜங்கனானா பவன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
  • தேசிய மக்கள் தொகைப் பதிவு (National Population Register - NPR) மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றைத் தயாரிக்க 12,000 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கின்றது.

இதுபற்றி

  • NPR ஆனது எந்தவொரு சாதாரண குடியிருப்பாளரின் உயிர்த்தரவு மற்றும் மக்கள் தொகை விவரங்களை இணைக்கின்றது. இது குடியிருப்பாளர்களின் விரிவான தரவுத்தளமாக அவற்றை மாற்றுகின்றது.
  • ஒரு சாதாரண குடியிருப்பாளர் என்பவர்
    • கடந்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உள்ளூர் பகுதியில் வசித்த நபராக வரையறுக்கப் படுகின்றார். (அல்லது)
    • அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அந்தப் பகுதியில் வசிக்க விரும்பும் ஒருவராக வரையறுக்கப் படுகின்றார்.
  • NPR நடவடிக்கையானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து வேறுபட்டது. இது  தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (NRC - National Register of Citizens) இணைக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்