சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வேளாண் கழிவுகள் மற்றும் பூஞ்சைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதி கட்டும் பொருளை உருவாக்கி வருகின்றனர்.
அவர்கள் வேளாண்மை மற்றும் காகிதக் கழிவுகளைப் பயன்படுத்தி மக்கும் வகையிலான பொதி கட்டும் பொருளை உருவாக்கினர்.
கனோடெர்மா லூசிடம் மற்றும் ப்ளூரோடஸ் ஆஸ்ட்ரேட்டஸ் போன்ற பூஞ்சைத் திரிபுகள் ஆனது கழிவுசார் மூலக்கூறுகளில் வளர்க்கப்பட்டன.
இது அட்டைப் பெட்டியில் வளர்க்கப்படும் கனோடெர்மா EPS (விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன்) கூறினை விட அதிக அழுத்தம் கொண்ட வலிமையைக் காட்டியது.
இந்தியா ஆண்டுதோறும் 350 மில்லியன் டன்களுக்கு மேலான வேளாண் கழிவுகளை உற்பத்தி செய்கிறது, அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இந்தப் பொதி கட்டும் பொருள் ஆனது வழக்கமான தாள்களுக்குப் பதிலாக நெகிழி இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக அமையும்.