இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான தொலைநோக்குத் திட்டமானது (2021-2031) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தத் தொலைநோக்குத் திட்டமானது இந்திய உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தினை வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான சட்டப்பூர்வ ஒழுங்குமுறை அமைப்பாகும்.
இது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமானது நாட்டின் உயிரிப் பன்முகத் தன்மையைக் குறிப்பாக, 1998 ஆம் ஆண்டு தேசிய உயிரியல் பூங்கா கொள்கையின் படி விலங்கினங்களைப் பாதுகாப்பதில் நாட்டின் முயற்சியைப் பூர்த்தி செய்வதும் வலுப்படுத்துவதுமே ஆகும்.
முக்கியப் பணிகள்
இது இந்திய உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் சுகாதார நலனுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை விதிக்கிறது.
நாட்டிலுள்ள ஒவ்வோர் உயிரியல் பூங்காவும் தனது செயல்பாட்டிற்காக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
இந்த ஆணையத்தினால் உயிரியல் பூங்காக்களின் அங்கீகாரத்தினைத் திரும்ப பெறவும் இயலும்.