மனிதர்களை கடத்துதல் குறித்த அறிக்கையானது அமெரிக்க அரசுத் துறையினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
கோவிட்-19 பெருந்தொற்றானது மனிதர்கள் கடத்தப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதோடு, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கடத்தலுக்கு எதிரான முயற்சிகளிலும் அது இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களைக் கடத்தும் குற்றங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் குறைந்த பட்ச தரநிலைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப் படும் முயற்சிகளின் அடிப்படையில் நாடுகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
அவை மொத்தமாக மூன்று அடுக்குகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
கடத்தலால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (Trafficking Victims Protection Act – TVPA) குறைந்தபட்ச தரநிலைகளுக்கு முழுவதுமாக இணங்காத நாடுகள் இரண்டாம் அடுக்கில் (Tier-II) வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்திய நாடானது இந்த அடுக்கில் இடம் பெற்றுள்ளது.
TVPA என்பது அமெரிக்க நாட்டினுடைய மனித கடத்தல் மீதான ஒரு சட்டம் ஆகும்.