2028 ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) ஆனது 'மனித உரிமைகளுக்கான உலகளாவிய கூட்டணி'யை (GAHR) ஒரு நீண்டகால முன்னெடுப்பாகத் தொடங்கியுள்ளது.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) என்பது 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஐக்கிய நாடுகளின் பிரகடனம் ஆகும், இது அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கிறது.
முடிவெடுப்பதில் மனித உரிமைகளை மையப்படுத்துவதையும், பொறுப்புள்ள அரசாங்கங்கள், அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் நியாயமான பொருளாதாரங்களை மேம்படுத்துவதையும் இக்கூட்டணி நோக்கமாகக் கொண்டு உள்ளது.
நோக்கம் சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய, செயல் சார்ந்த, சுற்றுச்சூழல் கட்டமைப்பு மற்றும் மாற்றுச் சிந்தனை அணுகுமுறைகள் ஆகியன இதன் முக்கியக் கொள்கைகளாகும்.
இந்த முன்னெடுப்பானது கற்பனை செய்தல் (சிறந்த எதிர்காலத்தை உருவகப் படுத்துதல்), உரையாடல் (உள்ளடக்கிய விவாதங்களை ஊக்குவித்தல்) மற்றும் செயல்படுதல் (வாக்குறுதிகளைச் செயலாக மாற்றுதல்) ஆகிய மூன்று கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.