TNPSC Thervupettagam

மரம் வெட்டுவதற்கான புதிய விதிகள்

July 4 , 2025 14 hrs 0 min 14 0
  • மரப் பொருட்கள் அடிப்படையிலான வணிகங்கள் வளர உதவும் வகையில் வேளாண் நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான சில புதிய விதிகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
  • இந்த விதிகள் ஆனது மர வளர்ப்பை (வேளாண் காடுகள்) ஆதரிக்கின்றன மற்றும் அதன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் மர உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இது இறக்குமதி செய்யப்பட்ட மரங்களின் மீதான தேவையைக் குறைக்கவும், அம்மரப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.
  • வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் மரப் பொருட்கள் சார்ந்த சில எளிதான விதிகளை உருவாக்குவதற்கு மாநில அளவிலான ஒரு குழு மாநிலங்களுக்கு வழிகாட்டும்.
  • விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நிலம், மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்ட காலம் போன்ற விவரங்களுடன் தங்கள் தோட்ட வளர்ப்பு குறித்து தேசிய மர மேலாண்மை அமைப்பு (NTMS) தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்த முன்னெடுப்பானது வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குவதையும் நிலத்தின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்