TNPSC Thervupettagam

மறைந்த மத்திய அமைச்சர்களின் பெயர் இடப்பட்ட தேசிய நிறுவனங்கள்

February 20 , 2020 1995 days 572 0
  • இந்திய அரசு மறைந்த அமைச்சர்களின் நினைவாக தேசிய நிறுவனங்களுக்குப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • உடல் நலமின்மை காரணமாகப் பின்வரும் தலைவர்கள் 2019 ஆம் ஆண்டில் காலமானார்கள்.
  • அவர்கள் மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோராவர்.
  • பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது (Institute of Defence studies and Analyses - IDSA) மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் என மறுபெயரிடப் பட்டுள்ளது.
  • அவரது மிகப்பெரிய பங்களிப்பு இந்திய இராணுவத்தினருக்கான “ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்” என்ற  திட்டமாகும்.
  • புதுதில்லியில் உள்ள பிரவாசி பாரதிய மையம் மற்றும் வெளியுறவு நிறுவனம் முறையே சுஷ்மா ஸ்வராஜ் பவன் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு சேவை நிறுவனம் என்று மறுபெயரிடப் ட்டுள்ளது.
  • தேசிய நிதி மேலாண்மை நிறுவனமானது அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் என்று மறுபெயரிடப் பட்டுள்ளது.
  • மேலும், 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில், தில்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானமானது அருண் ஜெட்லி விளையாட்டரங்கம் என்று மறுபெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்