கோவா மாநில அரசானது, அதன் முதன்மை நலத்திட்டமான 'மாஜே கர்' யோஜனா என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது அரசு மற்றும் சமூக நிலங்களில் கட்டமைக்கப்பட்ட வீடுகளை முறைப்படுத்துவதையும் அங்கு நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு உரிமம் சார் உரிமைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கோவா மாநில நில வருவாய் சட்டம், கோவா மாநில அரசின் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் வன உரிமைகள் சட்டம் ஆகியவற்றில் உள்ள முறைகேடுகளை நிவர்த்தி செய்யும்.